மைத்திரி பயணித்த கார் மீது தடுப்பு விழுந்தது குறித்து விசாரணை

619

மத்திய அதிவேக வீதியின் குருநாகல் இடைப்பாதையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த கார் மீது, பணம் செலுத்தும் நுழைவாயிலில் இருந்த தடுப்பு விழுந்தமை குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமையே இதற்குக் காரணம் என உயர் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறையும் குறித்த பணம் செலுத்தும் நுழைவாயிலில் ஒரே அதிகாரி தான் இருந்தாரா? அல்லது இந்த நிகழ்வு தற்செயலானதா? என பாதுகாப்பு தரப்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (04) முற்பகல் குருநாகல் மாற்றுப்பாதையில் உள்ள பணப்பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி பயணித்த காரின் மீது இவ்வாறு தடுப்பு விழுந்துள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here