கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தோருக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி பணிப்பு

940

கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை தெனியாய நோக்கிப் பயணித்த பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here