வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்கள் தொடர்பில் உடனடி ஆய்வு

264

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்கள் தொடர்பில் உடனடி ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளவற்றை அகற்றுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழல் ஆணையம், சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (என்பிஆர்ஓ) அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், விழும் அபாயத்தில் உள்ள வீதியோர மரங்களை அகற்றுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று காலை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து விழுந்ததில் 5 பயணிகள் உயிரிழந்ததுடன் 10 பேர் காயமடைந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here