வெள்ளம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக 600 இராணுவத்தினர்

259

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் 600 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக நில்வலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாத்தறையில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை மூடப்படும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு தெரிவித்துள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here