“தயவுசெய்து என்னை பணி நீக்கம் செய்யாதீர்கள்”

1319

நுகர்வோரை அநாகரீகமான முறையில் தூற்றியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியின் முகாமையாளரையும் மற்றுமொரு அதிகாரியையும் பணி இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறச் சென்ற சமுர்த்தி பெண் ஒருவரை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த சமுர்த்தி வங்கி முகாமையாளரையும் மற்றுமொரு உத்தியோகத்தரையும் பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பிரதேச செயலாளர் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சம்பந்தப்பட்ட மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று சமுர்த்தி வங்கி அதிகாரியை சந்திக்கச் சென்றிருந்தமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இடம்பெற்றுள்ளது.

பணி இடைநீக்கத்தால் மிகவும் உதவியற்ற நிலையில் இருப்பதாகவும், கூலி வேலை கிடைக்காமல் இருப்பதாகவும் அதிகாரிகளிடம் குறித்த சமூர்த்தி அதிகாரிகள் கூறி அழுதுள்ளனர்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here