மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களையும் கிடைக்கக்கூடிய வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகபட்சமாகப் பயன்படுத்தி துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (10) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கினார்.
வெள்ளத்தினால் சேதமடைந்த அனைத்து வீதிகளையும் சீர்செய்யுமாறு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.