மலைப்பாதைகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்

214

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மலைப்பாதைகளில் வாகனங்களை செலுத்தும் போது அவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலைப்பாதைகளில் தொடர்ந்தும் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனம் ஓட்டும் போது மலைப்பாதைகள் தொடர்பில் சரியான புரிதல் அவசியம் எனவும் பண்டார தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள வீதிகளில் மரங்கள், கற்கள், மேடுகள் தொடர்ந்து விழுந்து வருவதாகவும், பல சமயங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக வீதி தெரிவதில்லை எனவும், எனவே வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பண்டார தெரிவித்தார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here