follow the truth

follow the truth

February, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி

பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி

Published on

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகத் தலைவர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஷில் ராஜபக்ஷ, அன்றைய தினமே பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி அமைச்சராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாகவும், சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாகவேவ பஷில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதுடன், அந்த இடத்திற்கு பஷில் ராஜபக்ஷ, நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

ரிஷாட் பதியுதீன் – பிரான்ஸ் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில்...

மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீதும், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றனர்

நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி...