follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகியமை குறித்து கேள்வி

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகியமை குறித்து கேள்வி

Published on

புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்து நேற்று (15ஆம் திகதி) இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இரண்டு பரீட்சை தாள்களும் வெளியாகியிருந்தன.

218013 எண் கொண்ட இரண்டாவது வினாத்தாள் மற்றும் 61313 எண் கொண்ட முதல் வினாத்தாள் இவ்வாறு வெளிவந்துள்ளன.

பரீட்சை முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மாதங்களுக்கும் மேலான காலப்பகுதியில், வினாத்தாள்கள் பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான இரகசிய ஆவணங்கள் மற்றும் அதற்கு முன்னர் அவற்றை பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தச் சட்டம் 2017ஆம் ஆண்டு அப்போதைய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமாரவின் காலத்தில். ஆசிரியர்கள், குறிப்பாக தனியார் ஆசிரியர்கள், பரீட்சைக்குப் பிறகு, தாள்களை பகிரங்கமாக விவாதிப்பது மற்றும் விமர்சிப்பது போன்ற போக்கைக் கட்டுப்படுத்த இது போன்ற ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டச் சூழல் உருவான ஆண்டிலிருந்து, பரீட்சைக்கு முன், கண்டிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு, அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்ட நிலையில், இம்முறை, அந்தத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

மேலும், நேற்றைய பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களின் எண்ணிக்கையை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுமில்லை.

இச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர், பரீட்சை பெறுபேறுகள் கசிந்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...