follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

Published on

வெப்பமண்டல ஒன்றிணைப்பு மண்டலம் நாட்டின் காலநிலையை பாதித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் தாக்கம் காரணமாக நாட்டின் தற்போதைய மழை நிலைமையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மில்லிமீற்றர் 100க்கு மேல் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...