follow the truth

follow the truth

August, 2, 2025
Homeஉலகம்தன்பாலின திருமணம் குறித்து இன்று வரலாற்றுத் தீர்ப்பு

தன்பாலின திருமணம் குறித்து இன்று வரலாற்றுத் தீர்ப்பு

Published on

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

திருமணம் செய்து கொள்ள முடியாதது அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும், அவர்களை “இரண்டாம் தர குடிமக்கள்” ஆக்குவதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தன்பாலினத்தவர் திருமணம் என்பது இந்திய கலாசாரத்திற்கு எதிரானவை என்று கூறி அரசும் மதத் தலைவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

திருமணம் செய்வதற்கான பாலின சமத்துவத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அது இந்தியாவின் கோடிக்கணக்கான தன்பாலின மக்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்கும்.

தத்தெடுப்பு, விவாகரத்து மற்றும் வாரிசுரிமை போன்ற பல சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், இந்த இந்திய சமூகத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்த வழக்கிலுள்ள முக்கியமான சட்ட அம்சங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...