தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை நீக்கம்

566

தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை முழுமையாக நீக்க வேண்டும் என சுயாதீன விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தனுஷ்க குணதிலக விடுவிக்கப்பட்டதையடுத்து, குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தீர்மானித்ததாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, கற்பழிப்பு குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் வாரியம் தனுனிஷ்கவுக்கு எதிராக கிரிக்கெட் தடை விதித்தது.

அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு சமீபத்தில் இந்த வழக்கில் இருந்து தனுஷ்கா விடுவிக்கப்பட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here