நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல பிரதேசங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவித்துள்ளது.