லெபனானில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று(17) தெரிவித்திருந்தது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இது குறித்து தெரிவிக்கையில்;
“நேற்று, லெபனானில் உள்ள பெரூஃப் நகருக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உட்பட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய இலங்கைப் பெண். இது தொடர்பில், தூதரகத்திலிருந்து மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்” என்றார்.