இடிந்து விழுந்த லெபனான் கட்டிடத்தில் சிக்கிய பெண் அடையாளம்

321

லெபனானில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று(17) தெரிவித்திருந்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இது குறித்து தெரிவிக்கையில்;

“நேற்று, லெபனானில் உள்ள பெரூஃப் நகருக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உட்பட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய இலங்கைப் பெண். இது தொடர்பில், தூதரகத்திலிருந்து மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்” என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here