follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணினி மயமாக்கலுக்கு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணினி மயமாக்கலுக்கு

Published on

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இந்நாட்களில் கணினிமயமாக்கப்பட்டு வருவதாகவும், முடிவுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பெறுபேறுகளை கணினி மயமாக்கும் தினசரி திறன் இரண்டரை இலட்சம் என்றும், பரீட்சை முடிவுகளை மாணவர்களுக்கு விரைவில் வழங்க பரீட்சை திணைக்கள ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

2022 (2023) கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் தாமதமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆகஸ்ட் 18ம் திகதி துவங்கி, ஆகஸ்ட் 27ம் திகதி வரை பத்து நாட்கள் விடைத்தாள் மதிப்பீடு நடந்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...