follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணினி மயமாக்கலுக்கு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணினி மயமாக்கலுக்கு

Published on

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இந்நாட்களில் கணினிமயமாக்கப்பட்டு வருவதாகவும், முடிவுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பெறுபேறுகளை கணினி மயமாக்கும் தினசரி திறன் இரண்டரை இலட்சம் என்றும், பரீட்சை முடிவுகளை மாணவர்களுக்கு விரைவில் வழங்க பரீட்சை திணைக்கள ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

2022 (2023) கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் தாமதமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆகஸ்ட் 18ம் திகதி துவங்கி, ஆகஸ்ட் 27ம் திகதி வரை பத்து நாட்கள் விடைத்தாள் மதிப்பீடு நடந்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...