follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1நாடாளுமன்ற வாக்களிக்கும் முறையை மாற்றும் பிரேரணை - இன்று கலந்துரையாடல்

நாடாளுமன்ற வாக்களிக்கும் முறையை மாற்றும் பிரேரணை – இன்று கலந்துரையாடல்

Published on

நாடாளுமன்ற வாக்களிப்பு முறையை கலப்பு முறைக்கு மாற்றுவது தொடர்பில், மக்கள் ஆணைக்கு அமைய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கருத்துக்களை அறியும் வகையில் இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறும் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து தரப்பினரையும் பங்கேற்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (18) காலை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முறையை மாற்றியமைத்து கலப்பு வாக்களிப்பு முறைமை மாற்றியமைக்கும் யோசனை மக்கள் ஆணையின்படி நல்லெண்ணத்துடன் முன்வைக்கப்படுவதாகவும், இதற்காக மக்கள் காத்திருப்பதாகவும், உள்ளூராட்சித் தேர்தல் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பொது நிர்வாக அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில். உள்ளூராட்சி வாக்கெடுப்பை இரத்து செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும், மனசாட்சிப்படி நல்லெண்ணம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அரசாங்கப் பணம் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் நல்லெண்ணத்துடன் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வாக்களிப்பு முறை மாற்றம் தொடர்பில் மூன்று குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதன்படி, உள்ளுராட்சி மன்ற வாக்களிப்பு முறையை மாற்றி முதலாவது தேர்தல் நடத்தப்பட்டதாகவும், மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை மாற்ற முற்பட்ட போது அது தடுக்கப்பட்டதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதன்காரணமாக 18.10.2023 அன்று பிற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், சந்தேகங்களை எழுப்பி அரசியல் அல்லது அவ்வாறான மாற்றங்களைச் செய்ய முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...