follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

பணிகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அந்த கலந்துரையாடலில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

ப்ளூம்பெர்க் இணையத்தளத்துடனான கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாரிஸ் கிளப் மற்றும் வெளிநாட்டுப் பத்திரதாரர்களுக்குக் கொடுக்க வேண்டிய இந்தியாவின் கடனை மறுசீரமைக்கத் தேவையான விதிமுறைகளை சீனா இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா எக்சிம் வங்கியுடன் தற்காலிக விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, 20 சதவீத குறைப்பை பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் புதிய திட்டங்களை சமர்ப்பித்த மற்ற உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டுவது குறித்து இப்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது, என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...