follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1பாடசாலைகளில் மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்

பாடசாலைகளில் மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்

Published on

2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப மாணவர்களை உள்ளடக்கும் வகையில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில் “உலகப் பாடசாலை உணவுத் திட்டத்தின்” முதலாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டில், 4.1 மில்லியன் மாணவர்களைக் கொண்ட முழு மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படும் என்றும், வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை 204 மில்லியன் டாலர்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி அடுத்த ஆண்டு அரச பாடசாலை சத்துணவு உதவி நிதியம் ஏற்படுத்தப்படும் என்றும், அது தொடர்பான சட்டத்தை அறிமுகம் செய்ய எடுக்கப்பட்ட கொள்கை முடிவை சட்ட வரைவுத் துறை ஏற்கனவே தயாரித்துள்ளது என்றார்.

உலக உணவுத் திட்டம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நிறுவனம் (USAID) மற்றும் உள்ளூர் வர்த்தகத் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவை இந்தப் பாடசாலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...