மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரிப்பு

141

தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்க கூடும் என சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,368 ஆகும்.

அவர்களில், இந்த மாதம் 1,885 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயினால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here