மோடியிடம் இருந்து அப்பாஸுக்கு அழைப்பு

280

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது காஸா பகுதியில் அல் அஹில் மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பலஸ்தீனர்கள் குறித்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸிடம் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அல் அஹில் மருத்துவமனை மீதான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here