இ.போ.ச பேரூந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது – 26 பேர் காயம்

234

பதுளை – மொனராகலை பிரதான வீதியின் மீகஹகிவுல, யோதஉல்பத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

பேரூந்து விபத்துக்குள்ளான போது சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here