follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1பலஸ்தீனத்தின் துன்பங்களை இலங்கையும் அனுபவித்தது

பலஸ்தீனத்தின் துன்பங்களை இலங்கையும் அனுபவித்தது

Published on

ஏகாதிபத்தியங்கள் தமது காலனித்துவக் கொள்கையை மத்திய கிழக்கில் மிகவும் முன்னேறியதாகவும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கேயர், டச்சு மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியங்களின் கீழ் காலனியாக பலஸ்தீன பூமி அனுபவித்த துயரத்திற்கு நிகரான ஒரு நிலையை இலங்கை எவ்வாறு அனுபவித்தது என்பதை நினைவுக்கு வருவதாக இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் கூறினார்.

அன்று இலங்கையின் சுதந்திரத்திற்காக வீர கப்பட்டிபொல, புறநாப்பு, கொங்கலேகொட பண்டா, வாரியபொல தேரர், குடாபொல தேரர் என பல்வேறு காலகட்டங்களில் சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் எழுந்து நின்று போராடியவர்கள் என்றும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

அன்றும் அவர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தி கொடூரமான அடக்குமுறையை மேற்கொண்டதாகத் தெரிவித்த இம்தியாஸ் பகீர் மார்க்கர், ஏகாதிபத்திய சக்திகளும் அன்றைய காலத்தில் மகாத்மா காந்தி, மண்டேலா, யாசிர் அராபத் ஆகியோரின் பெயர்களுக்கு முன்னால் பயங்கரவாதி என்ற அடைமொழியைப் பயன்படுத்தினர் என்றார்.

இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையில் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...