பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய(20) தினம் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நடந்து கொண்ட விதம் மற்றும் அவர் தன்னிச்சையாகக் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரால் இரண்டு கடிதங்கள் சபாநாயகரினது பணிக்குழாமிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.