follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

Published on

மறு அறிவிப்பு வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு ஈராக் அரசாங்கம் உதவ மாட்டார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியதையடுத்து, ஈராக் உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் அமெரிக்க வீரர்கள் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் தங்கள் குடிமக்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...