காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கில் நிலைமை கட்டுப்பாட்டை மீறும் என ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு போர் உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவே பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு இராணுவத்தினரிடம் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது மக்கள் “உயிர்களுக்காக” போராடுவதாகவும், ஹமாஸுடனான சண்டை “வாழ்வா சாவா” போர் என்றும் கூறியிருந்தார்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடமிருந்து இஸ்ரேலும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது, மேலும் ஈரான் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மோதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியுள்ளது.