follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு மேலதிக கொடுப்பனவு

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு மேலதிக கொடுப்பனவு

Published on

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இக்காலப்பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தரின் சம்பளத்திற்கு மேலதிகமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவும் மேலும் கைது செய்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...