ஆட்சியை கவிழ்க்க முடியும் – எஸ்.பி

675

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

நேற்றிரவு (23) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி – பொதுஜன பெரமுனவின் அனைத்து அமைச்சர்களும் நீக்கப்பட்டாலும் நீங்கள், காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

“இல்லை, இருக்கிறது. ஆட்சியைக் கவிழ்க்க முடியும். எம்மால் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க முடியும். பல விடயங்களைச் செய்ய முடியும். அப்படிச் செய்யும் எண்ணம் எமக்கு இல்லை. நான் அமைச்சரவையில் இல்லாத போதும் ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து எனது கருத்தை அவரிடம் தெரிவித்தவன்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here