பிரான்ஸ் ஜனாதிபதி பலஸ்தீனுக்கு

495

இஸ்ரேலின் டெல் அவிவ் சென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் சந்தித்தார்.

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் பலஸ்தீன ஜனாதிபதியுடன் மக்ரோன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொண்டாலும், காஸா பகுதியில் அப்பாவி பலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்துவது நியாயமில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனிடம் பலஸ்தீன ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸும் காஸா பகுதியில் நிலவும் மோதலுக்கு உடனடி முடிவு கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி டெல் அவிவ் வந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடியில் இஸ்ரேல் அரசுக்கு பிரான்ஸ் முழுமையாக ஆதரவளிக்கும் என்று வலியுறுத்தினார்.

பல ஆண்டுகளாக நிலவி வரும் இஸ்ரேல்-பலஸ்தீன நெருக்கடிக்கு தீர்வு காண இரு நாடுகளின் தீர்வு அவசியம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் மக்ரோன் சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், இரு நாட்டு தீர்வைக் காண, பலஸ்தீன நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து குடியேற்றங்களை நிறுவுவதை இஸ்ரேல் முதலில் நிறுத்த வேண்டும் என்றும் விளக்கினார்.

கடந்த 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெல் அவிவ் வந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, அந்த தாக்குதலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்ததை தொடர்ந்து ​​இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவிக்க வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here