முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை

221

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிணை வழங்கியுள்ளது.

குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என நம்பிக்கை வெளியிட்ட நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்க தீர்மானித்துள்ளது.

73 வயதான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 2017 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் பதவியை இழந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர் ‘தாரிக் இ இன்சாப்’ கட்சியின் தலைவர் இம்ரான் கான்.

பாகிஸ்தானை விட்டு வெளியேறி கிளாண்டனில் 4 ஆண்டுகள் வசித்து வந்த நவாஸ் ஷெரீப், கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் திரும்பினார்.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here