சீன கடல் ஆராய்ச்சிக் கப்பல் “ஷி யான் 6” இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன கடல் ஆய்வுக் கப்பல் வருகை குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.
எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன.
“ஷி யான் 6” என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில அதிர்வுத் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு நவீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகும்.
நாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த கப்பல் ஆய்வு நடத்த உள்ளது.
இதன்படி, “ஷி யான் 6” என்ற கப்பல் சுமார் 25 நாட்கள் இந்த நாட்டில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.