follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1மஹீஷ் திக்ஷன விளையாடுவாரா? இல்லையா?

மஹீஷ் திக்ஷன விளையாடுவாரா? இல்லையா?

Published on

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று, முதல் பயிற்சியில் இலங்கை அணி பங்கேற்றது.

கூடுதல் வீரர்களாக வந்த ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோரும் பயிற்சியில் இணைந்தனர்.

நாளை நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இங்கிலாந்து போட்டி, இரு அணிகளுக்கும் மிகவும் தீர்க்கமான போட்டியாக அமையவுள்ளது.

போட்டியில் முன்னேற வேண்டுமானால் இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி நல்ல மனநிலையில் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இங்கிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளமையால் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்துள்ளதாக கிரிக்கட் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் திக்ஷனவும் உபாதைக்கு உள்ளானார்.

பின்னர், அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உலகக் கிண்ணத்தில் எதிர்வரும் போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...