follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மஹீஷ் திக்ஷன விளையாடுவாரா? இல்லையா?

மஹீஷ் திக்ஷன விளையாடுவாரா? இல்லையா?

Published on

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று, முதல் பயிற்சியில் இலங்கை அணி பங்கேற்றது.

கூடுதல் வீரர்களாக வந்த ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோரும் பயிற்சியில் இணைந்தனர்.

நாளை நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இங்கிலாந்து போட்டி, இரு அணிகளுக்கும் மிகவும் தீர்க்கமான போட்டியாக அமையவுள்ளது.

போட்டியில் முன்னேற வேண்டுமானால் இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி நல்ல மனநிலையில் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இங்கிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளமையால் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்துள்ளதாக கிரிக்கட் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் திக்ஷனவும் உபாதைக்கு உள்ளானார்.

பின்னர், அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உலகக் கிண்ணத்தில் எதிர்வரும் போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...