follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1காஸா போரில் சீனா நடுநிலைமை வகிக்கிறதா?

காஸா போரில் சீனா நடுநிலைமை வகிக்கிறதா?

Published on

ஹமாஸ் அமைப்பிடமிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று சீனா கூறுகிறது.

அங்கு, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

ஒரு சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைக்காக தனது வெளியுறவு அமைச்சர் வாங் யீ அமெரிக்கா செல்ல தயாராகி வரும் பின்னணியில் சீனா இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து உருவான இராணுவ சூழ்நிலைக்கு சீனா பதில் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மோதலை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனா அங்கு கூறியிருந்தது. ஆனால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு குறித்து சீனா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே, இஸ்ரேல் குறித்து சீனாவின் திடீர் கருத்துக்களால் சர்வதேச வர்ணனையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

காரணம், சீனா ஈரானின் நட்பு நாடு. இஸ்ரேலுக்கு எதிரான காசா போரின் போது ஈரான் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இரு இயக்கங்களையும் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...