லங்கா சதொச மேலும் சில பொருட்களின் விலையை குறைத்தது

1136

லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை ரூ. 6, ஒரு கிலோ உளுந்தின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்பு அரிசி கிலோ 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த பொருட்களின் புதிய விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாக உள்ளது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகும்.
ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாவாகும்.
சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here