follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1கப்பம் கோரி உங்களுக்கும் அழைப்புகள் வருகிறதா?

கப்பம் கோரி உங்களுக்கும் அழைப்புகள் வருகிறதா?

Published on

வெளிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய நபரை முல்லேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வர்த்தகருக்கு தனது கைத்தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கப்பம் கோரி கொலைமிரட்டல் விடுத்ததாக கடந்த 19ஆம் திகதி பிற்பகல் முல்லேரிய பொலிஸாருக்கு இந்த வர்த்தகரிடம் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த அழைப்பை விடுத்த நபர் நேற்று மதியம் அங்கொட – தெல்கஹவத்த பிரதேசத்தில் வைத்து முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் கப்பம் கோரிய தொலைபேசியின் சிம் அட்டையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கொட – தெல்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...