follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉள்நாடுமில்கோ ஊழியர்களுக்கு பிணை

மில்கோ ஊழியர்களுக்கு பிணை

Published on

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா உட்பட அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பலவந்தமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேர் தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (25) மாலை மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா மற்றும் பல நிர்வாக சபை உறுப்பினர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறாத வகையில் மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்று செயற்பட்டுள்ளது.

இது ஊழியர் நலன்கள் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலாகும்.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் பொலிஸார் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

பொலிஸாரின் தலையீட்டின் பின்னர் தலைவர் மற்றும் குழுவினர் வெளியே அழைத்து வரப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மில்கோ நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 13 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

மில்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...