‘காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்’

329

கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு.

சிறப்பு அறிவிப்பு

24/10/2023 அன்று பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் ஆசிரியர் அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர்- அதிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. மற்றும் கல்வி அமைச்சர் கல்வி மாநாட்டிற்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார்.

நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சு சம்பவம் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here