சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் Copy அடித்த எம்பி

1508

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்கள் கையிருப்புடன் பதில் எழுதியதாகக் கூறப்படும் தென் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை கடுமையான பரீட்சை நிபந்தனைகளின் கீழ் பரீட்சை துறையால் நடத்தப்படுகிறது.

இந்த எம்.பி., தேர்வுக்கான விடைகளை நோட்டுகளை அடுக்கி வைத்து எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல்வாதிகளின் பின்னால் சென்று இந்த விசாரணையைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் நாம் வினவிய விசாரனையில் தனக்கும் இது தொடர்பான சில செய்திகள் கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here