follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1வசந்த யாப்பா பண்டார நாளை CID இற்கு

வசந்த யாப்பா பண்டார நாளை CID இற்கு

Published on

வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் கருத்துக்கு எதிராக ஸ்லிம் மருந்தக நிறுவனம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளமை ஒரு பின்னணியில் உள்ளது.

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திடமிருந்து டோட்டல் பேரன்டெரல் நியூட்ரிஷன் என்ற மருந்தை அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்த கருத்துக்கு எதிராக ஸ்லிம் மருந்து நிறுவனம் முறைப்பாடு செய்திருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நிறுவன உரிமையாளரால் இதேபோன்ற முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கூறியதில் உண்மையில்லை எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனம் எந்தவிதமான மோசடி அல்லது ஊழலிலும் ஈடுபடவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார வெளியிட்ட அவதூறுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்த கருத்தும் இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் நிராகரிக்கப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...