follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இந்தியாவில் மற்றொரு பயங்கர ரயில் விபத்து

இந்தியாவில் மற்றொரு பயங்கர ரயில் விபத்து

Published on

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் பழுதடைந்ததால், நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதியது.

எவ்வாறாயினும், சமிஞ்ஞை கோளாறு காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு சமிஞ்ஞை கோளாறு காரணமாக, ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதியதில் 280-க்கும் மேற்பட்ட பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...