follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1"எமது அரசாங்கத்தில் இந்தியாவை கைவிட முடியாது" - அநுர

“எமது அரசாங்கத்தில் இந்தியாவை கைவிட முடியாது” – அநுர

Published on

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை இந்தியா இல்லாமல் தீர்மானிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிகார மையத்தில் இலங்கை அமைந்திருப்பதால், இந்தியாவை விரும்பியோ விரும்பாமலோ சமாளிக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், உலகின் எந்தவொரு அதிகாரத் தளத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கை தனது ஆட்சியில் பின்பற்றப்படும் என்றார்.

உலகில் எந்த ஒரு நாடும் தனிமையில் வாழ முடியாது என்றும் அதிகார மோதல்கள் பலம் வாய்ந்த நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாவிட்டாலும் அதிகார மோதல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தும் இலங்கை அதிகார மையமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை எனவும், ஆனால் தற்போதுள்ள அதிகார மையங்கள் முரண்பாட்டின் தரப்பினராகவோ அல்லது தவிர்க்க முடியாத கட்சிகளாகவோ மாறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...