தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர்

135

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று (31) வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன் அமைச்சர் நடத்திய விசேட கலந்துரையாடலில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம 1992ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் இணைந்து 2000ஆம் ஆண்டு விசேட வைத்திய நிபுணரானார்.

தற்போது தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் சிரேஷ்ட வைத்திய நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here