மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வினை மேற்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
தற்போதுள்ள பொது கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி, மின் கட்டண மதிப்பாய்வு காலம் 6 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதனைக் கையாள்வதால் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, 3 மாத கால அவகாசத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கு மேலதிகமாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆதரவுடன் இலங்கை மின்சார சபையானது ஆற்றலை அனுப்பும் தணிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் நீர்மின் கணிப்புகளை வலுப்படுத்தவும் தற்போதுள்ள பொது நடைமுறை வழிகாட்டல்களை திருத்துவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரினால் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.