அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டால் முறையிட தொலைபேசி இல

486

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.

அரிசியை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் தொடர்பிலும் இதே தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முறையிடலாம் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கீரிசம்பா அதிக விலைக்கு விற்பனை செய்து பதுக்கி வைத்திருந்த 5 பல்பொருள் அங்காடிகள் மீது நுகர்வோர் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. அதன்படி, வேயங்கொடை மற்றும் பல்லேவல பகுதிகளில் அதிக விலைக்கு கீரிசம்பா விற்பனை செய்து பதுக்கி வைத்திருந்த 5 கடைகளில் நுகர்வோர் அதிகாரசபையினர் சோதனை நடத்தினர்.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும், வியாபாரிகள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன்படி, நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here