பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
வறட்சி மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாத இறுதியில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வீரகட்டிய விவசாய சேவை நிலையத்தினால் வீரகட்டிய – அத்துபொதே பிரதேசத்தில் பரசூட் நெல் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.