follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை வழங்க தனியார் துறைக்கும் வாய்ப்பு

வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை வழங்க தனியார் துறைக்கும் வாய்ப்பு

Published on

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முந்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்த வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக தனியார் துறையினரால் வழங்கப்படும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அங்கு அரசாங்கத்தின் வருமானம் மற்றும் வினைத்திறனை அதிகரிப்பது, முதலீட்டாளர்களை ஈர்ப்பது, சுற்றுலாத்துறை, ஆடைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் யோசனைகளை முன்வைத்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...