அனைத்துப் பாடசாலைகளுக்கும் 30% சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் சிறந்த நிலைப் பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், பாடசாலைகளுக்கான பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனம் இதுவரை நூற்றி இருபத்தைந்து கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்திற்கு காகித தட்டுப்பாடு இல்லை எனவும் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.