follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு மருந்துத் தொகுதி

பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு மருந்துத் தொகுதி

Published on

பங்களாதேஷ் அரசினால் எதிர்வரும் வாரத்தில் 58,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளது.

அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், நாட்டில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பாக அரச மட்டத்தில் நீண்ட கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...