follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1'VAT வரியை உயர்த்தாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது'

‘VAT வரியை உயர்த்தாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது’

Published on

பிச்சை எடுக்கும் நாடாக இல்லாமல் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமமான தீர்மானமாக இருந்தாலும் இன்றைய தினம் எடுக்க வேண்டிய தீர்மானங்களை இன்றே சரியாக எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

VAT வரியை 18% அதிகரிப்பதற்கான தீர்மானம் தானோ அல்லது அமைச்சரவையோ தானாக முன்வந்து எடுக்கவில்லை என்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தலைமைத்துவம் என்பது மக்களுக்கு உண்மையை விளக்கி நாட்டுக்கு சரியான தீர்மானங்களை எடுப்பதையே குறிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தேர்தலை நெருங்கியுள்ள பாராளுமன்றத்திற்கு இவ்வாறான கடினமான தீர்மானங்களை எடுப்பது கடினமான விடயம் என்பது ஜனாதிபதியின் கருத்தாகும்.

நாட்டுக்காகத் தீர்மானங்களை எடுப்பதற்கு இளைஞர் தலைமைத்துவமும் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்காக உழைக்கக் கூடிய இளம் அமைச்சர்கள் குழுவொன்று இன்று அரசாங்கத்தில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுடன் இணைந்து சிறந்த பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்குச் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் வழங்குவது குறித்து அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு...

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...